குடும்ப பிரச்சனை காரணமாக கூலித்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
Worker suicide in namakkal
குடும்ப பிரச்சனை காரணமாக கூலித்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் கீழ் சாத்தாம்பூர் அருகே உள்ள பெருமாபாளையத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுரேஷ்(37). இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவியிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி சிவகாமி, கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மன வேதனை அடைந்த சுரேஷ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Worker suicide in namakkal