மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி.! வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழப்பு.!
worker on a motorcycle fell into the drain and died in nagapattinam
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பயத்தங்குடி வடக்கு தெருவை சேர்ந்த காசிநாதன் என்பவரின் மகன் தொழிலாளி சுரேஷ் பாபு (43). இவர் மோட்டார் சைக்கிளில் திருப்பயத்தங்குடியில் இருந்து சோழங்கநல்லூர் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால், திருப்பயத்தங்குடி வடிகால் வாய்க்காலில் சுரேஷ் பாபு தவறி விழுந்துள்ளார். இதைப் பார்த்த பகுதியில் இருந்தவர்கள் சுரேஷ் பாபுவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பயத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சுரேஷ் பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சுரேஷ் பாபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து சுரேஷ்பாபுவின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
worker on a motorcycle fell into the drain and died in nagapattinam