தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி.! ரயில் மோதி உயிரிழந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சித்தேரி பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் கூலித்தொழிலாளி டில்லி பாபு (36). இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள ரயில்வே தண்டபாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக அரக்கோணம் மார்க்கத்தில் வந்த ரயில் டில்லி பாபு மீது மோதியது.

இதில் டில்லி பாபு பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் உயிரிழந்த டில்லுபாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker killed in train collision in ranipet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->