தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து.! உடல் நசுங்கி தொழிலாளி உயிரிழப்பு.!
Worker killed in govt bus accident in kirishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து தொழிலாளி மீது மோதியதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை மாத்தூர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது திடீரென ஓட்டுனருக்கு மயக்கம் ஏற்பட்டதால் பேருந்து தாறுமாறாக சாலையில் ஓடியது.
இதனால் பயணிகள் அனைவரும் அலறிய நிலையில், நடத்துனர் பிரேக் போட்டு பேருந்து நிறுத்த முயன்றார். ஆனால் அப்பகுதியில் இருந்த ஐந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து, அவ்வழியாக சைக்கிளில் வந்த மாத்தூர் நாகம்பட்டியை சேர்ந்த கமலநாதன் மீது மோதிவிட்டு தாறுமாறாக சென்றது.
இதில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கமலநாதன் பரிதாபமாக உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த மாத்தூர் போலீசார், உயிரிழந்த கமலநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Worker killed in govt bus accident in kirishnagiri