தென்காசி: ஆற்றில் குளிக்க சென்றவருக்கு நிகழ்ந்த சோகம்..!
Worker drowns in river
ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி ,. இவர் அந்த பகுதியில் கூலி தொழிலாளியாக் வேலை செய்து வருகிறார். சம்பவதன்று, இவர் அந்த பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.
வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் உள்ள ஆற்றில் செல்லப்பாண்டி குளிக்க சென்றுள்ளார் அப்போது ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. இந்நிலையில், ஆற்றில் குளித்து கொண்டிருந்த செல்லபாண்டி ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.