சேலம் அருகே பரிதாபம்.! 50 அடி ஆழ கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி.!
Worker drowned in 50 feet deep well in salem
சேலம் மாவட்டத்தில் 50 அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மேல் காமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சின்னு. இவரது மனைவி குஞ்சம்மாள். இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வந்த சின்னு, அருகே உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென நிலை தடுமாறி சின்னு 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இதில் நீரில் மூழ்கி சின்னு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சின்னுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Worker drowned in 50 feet deep well in salem