மதுகுடிக்க பணம் தராததால் ஆத்திரம்.! மனைவி-மகளைத் தாக்கிய தொழிலாளி கைது.!
Worker arrested for beaten wife and daughter in tirunelveli
திருநெல்வேலி மாவட்டத்தில் மது குடிக்க பணம் தராததால் மனைவி மற்றும் மகளை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் உக்கிரன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பொன்னுசாமி(43). இவரது மனைவி தனலட்சுமி (38). இந்நிலையில் பொன்னுசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் சம்பவத்தன்று மது அருந்துவதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த பொன்னுசாமி தனலட்சுமி சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதையடுத்து பொன்னுசாமி அடிப்பதை தடுக்க வந்த அவரது மகள் கலைச்செல்வையும் அடித்துள்ளார்.
இதனால் இரண்டு பேரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவி மற்றும் மகளை தாக்கிய பொன்னுசாமியை கைது செய்தனர்.
English Summary
Worker arrested for beaten wife and daughter in tirunelveli