10 மாத கைக்குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்த பெண்..!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்த பெண், விரைந்து வந்த ரயில் முன் கைக்குழந்தையுடன் பாய்ந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் ரயில்நிலையத்தில் சரியாக அதிகாலை 4.10 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து மைசூர் செல்லும் விரைவு ரயில் ஒன்று புறப்பட்டது. 

அப்போது சற்று தொலைவில் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த பெண், தீடிரென ரயில் முன் பாய்ந்தார். இதனை எஞ்சின் ஓட்டுனர் பார்த்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் தலை துண்டான நிலையில் இறந்து கிடந்தார்.

அவர் அருகில் சுமார் 10 மாத கைக்குழந்தை உடலில் காயங்களுடன் அழுதுகொண்டு இருந்தது. போலீசார் குழந்தையை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். 

இதை தொடர்ந்து, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பெண் யார் மற்றும் எதற்காக அவர் இந்த முடிவு எடுத்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women suicide in train with baby


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->