கள்ளக்காதலன் செய்த காரியத்தால், உடல் கருகி உயிரிழந்த பெண்.! ராணிப்பேட்டை அருகே பயங்கரம்.!
WOMEN SUICIDE IN RANIPET FOR ILLEGAL LOVE
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாபேட்டை டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த அருளரசன் (30) என்பவர், தோல் தொழிற்சாலை பணியாளராக இருக்கின்றார். இவருக்கு சக்தி என்ற மனைவி இருந்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு முன்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு சக்தி கிருஷ்ணகிரியில் இருக்கும் தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், தன்னுடன் வேலை பார்த்து வந்த 32 வயதுடைய நாகம்மாள் என்பவருடன் அருளரசனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே திருமணமான நாகம்மாள் திருச்சியைச் சேர்ந்தவர. அவரும் கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாலாஜாபேட்டை வி.சி.மோட்டூரில் தங்கியிருந்துள்ளார்.
இருவரும் நெருங்கிப் பழகிய நிலையில், கடந்த ஞாயிறன்று அருளரசனின் தாயார் இறந்துவிட மாமியாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அருளரசனின் மனைவி சக்தி பெற்றோருடன் வந்துள்ளார். அப்போது மனைவியை கண்ட அருளரசனுக்கு மீண்டும் மனைவியுடன் வாழ ஆசை வந்துள்ளது.
எனவே, நாகம்மாளை தூக்கி எரிந்து பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த நாகம்மாள் பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்து இறந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
WOMEN SUICIDE IN RANIPET FOR ILLEGAL LOVE