நாமக்கல்: மனவேதனையில் பெண் தூக்கு போட்டு தற்கொலை
Women suicide in namakkal
நாமக்கல் மாவட்டத்தில் மனவேதனையில் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சர்புதீன். இவரது மனைவி சகிலாபானு. இவர்களுடைய மகள் ஜெஸ்சியா(32).
இவருக்கு திருமணமாகி சில நாட்களே ஆன நிலையில் கணவர் இறந்து விட்டதால், பெற்றோருடன் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் ஜெஸியாவிற்கு மீண்டும் திருமணம் செய்து வைப்பதற்காக முதல் மனைவியை இழந்த ஒரு மருமகனை பார்த்து, தந்தை சர்புதீன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் ஜெஸியா இதற்கு மறுத்துள்ளார். இதையடுத்து மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ஜெஸியா வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ஜெஸியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Women suicide in namakkal