பெண் விஷம் குடித்து தற்கொலை
Women suicide in Ariyalur
அரியலூர் மாவட்டத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் கீழவண்ணம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி செல்வி(42). இவருக்கு கடந்த மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
இதற்காக செல்வி சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் வயிற்று வலி அதிகமானதால் மனவேதனையில் இருந்த செல்வி வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதைப் பார்த்த உறவினர்கள் செல்வியை மீட்டு, சிகுச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Women suicide in Ariyalur