கிருஷ்ணகிரியில் கடன் பிரச்சனையால் பெண் எடுத்த விபரீத முடிவு.!
Women suicide due to debt problem in kirishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடன் பிரச்சனையால் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள எலத்தகிரி பகுதியை சேர்ந்தவர் சுசிலா(50). இவர் அதே பகுதியில் சொந்தமாக ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஹோட்டலில் வருமானம் இல்லாததால் சுசிலா பல இடங்களில் கடன் வாங்கிள்ளார்.
இதனால் அவருக்கு கடன் பிரச்சனை இருந்ததால், மனமுடைந்து காணப்பட்ட சுசிலா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஓசூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சுசிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பு:
[ உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனே அழையுங்கள்:
மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் - 104
சினேஹா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050
உங்களின் தோழன், தோழியாக பரிவுடன் பேச தயார். உங்கள் தனிப்பட்ட விவரம் வெளியிடப்படாது. பயமின்றி அழையுங்கள். புது வாழ்வை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்]
English Summary
Women suicide due to debt problem in kirishnagiri