அடேய்கலா.! இத காணும்னு எல்லாமா போலீஸ்கிட்டே போவீங்க.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு  மாவட்டம்  ஆணைக்கல் பாளையத்தை சேர்ந்த பெண் கோமதி என்ற குப்பாயாள் (50).

இவர் தனது மாட்டு தொழுவத்தில் வாத்துக்களை வளர்த்து கொண்டும் விற்பனை செய்து கொண்டும் இருந்தார்.

இவர் தனது குடும்பத்தினருடன் அந்தியூர் குருநாதசாமி கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்கள்.

அப்போது அவர் வளர்த்து வந்த வாத்துகளில் 2 வாத்துகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை யாரோ திருடி விட்டார்கள் என்று கருதிய கோமதி இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசில் புகார் அளித்தார் .

அதில் கூறியதாவது ‘‘நான் மாட்டு தொழுவத்தில் ஆடு, மாடு, கோழிகளுடன் வாத்துகளையும் வளர்த்து வந்தேன்.

குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று இருந்த நேரத்தில் யாரோ 2 வாத்தை திருடி சென்று விட்டனர். ''வாத்துகளை கண்டுபிடித்து  மீட்டு தாருங்கள்’’ என்று கூறி இருந்தார்.

இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women police report in erode


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->