அரை போதையில் அவதூறாக பேசிய பெண் காவலர்..!
women police drunk and fell down in public
தமிழகத்தின், திண்டுக்கல் மாவட்டத்தில் பெண் காவலர் ஒருவர் மதுபோதையில் என்ன பேசுகிறோம் என்றுகூட தெரியாமல் தகாத வகையில் பேசிய காரணத்தால் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, உள்ளூர் பேருந்து நிலையம் அருகே சீருடையில் இருந்த பெண் காவலர் ஒருவர் கீழே மயங்கி கிடப்பதை கண்ட பொதுமக்கள் அவரை எழுப்ப முயற்சி செய்தார்கள்.
பின்னர், அவர் மீது வீசிய வாடையை வைத்து, பெண் காவலர் குடிபோதையில் இருப்பதும், அதனால் நிதானத்தில் இல்லை என்பதும் தெரியவந்தது. இதை தொடந்து, அந்த பெண் காவலரின் செல்போனை எடுத்து அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவலரின் மகன் அவரை ஆட்டோவில் ஏற்றி உட்காரவைத்தார்.
இதை தொடர்ந்து, சற்றும் நிதானத்தில் இல்லாத அந்த பெண் காவலர், போதையில் அங்கிருந்தவர்களை அவதூறாக பேசினார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறை, அந்த பெண் காவலர் எங்கே என்று கேட்க வீட்டிற்கு சென்றுவிட்டதாக பொதுமக்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த சமயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பி ஏற்படுத்தியது.
English Summary
women police drunk and fell down in public