கற்பழித்து கொன்ற வழக்கில் திடீர் திருப்பம்..! உல்லாசத்திற்காக போன உயிர்.!  - Seithipunal
Seithipunal


திண்டிவனம் அடுத்த முழுக்கம் கிராமத்தில் கன்னியம்மாள் என்ற பெண் கணவரை பிரிந்த காரணத்தால் அதே கிராமத்தில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி இரவு கன்னியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

மறுநாள் காலை அவர் நீண்ட நேரமாக வெளியே வராத காரணத்தால் அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. காவல்துறையின் விசாரணையில் அந்தப் பெண் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட மர்ம நபர் வீட்டினுள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

பின்னர் விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர் கன்னியம்மன் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அச்சிரப்பாக்கத்தை  சார்ந்த கம்பி கட்டும் தொழிலாளியான சரவணன் என்பவருடன் கடைசியாக பேசியது தெரிய வந்துள்ளது. மேலும் சரவணனின் செல்போன் சிக்னல் கன்னியம்மாள் கொலைசெய்யப்பட்ட தினத்தன்று அந்தப் பகுதியில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து சரவணனை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கண்ணியம்மாளுக்கும் சரவணனுக்கும் 10 ஆண்டுகளுக்கு மேலாக முறையற்ற தொடர்பு இருந்ததாக தெரிய வந்துள்ளது.இந்த நிலையில் கொலை நடந்த அன்று கண்ணியம் மாளுடன் உல்லாசமாக இருந்து விட்டு அதன் பின் கன்னியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த ஆபரணங்களை கொடுக்குமாறு அந்த நபர் கேட்டுள்ளார் அதற்கு கன்னியம்மாள் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரம் கொண்ட சரவணன் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார்.

அதன்பின் கன்னியம்மாளின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு நகைகளை எடுத்துச் சென்றுள்ளார் என்பது காவல்துறையினரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சரவணனிடம் 3 சவரன் தங்க சங்கிலியை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women murdered by his illegal lover on thindivanam 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->