பிறந்த குழந்தையை துடிதுடிக்க எரித்து கொன்ற தாய்.! பதறவைக்கும் காரணம்.!  - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் சங்கர கோமதி என்ற 22 வயது இளம் பெண்ணிற்கு திருமணம் ஆகாத நிலையில், ஏற்பட்ட உறவில் ஆண் குழந்தை ஒன்று இரண்டு நாட்களுக்கு முன்பு பிறந்துள்ளது. 

இது வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த கோமதி மற்றும் அவரது தாய் இந்திராணி ஆகியோர் அதிகாலை 3:00 மணி அளவில் தியேட்டரின் காம்பவுண்டு அருகே குழந்தையை எரித்து கொலை செய்துள்ளனர். அப்பொழுது அந்தப் பக்கமாக காலைக்கடன் கழிக்க வந்த சிலர் குழந்தை எரிவதை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

விரைந்து வந்த போலீசார் தீயை அணைத்து குழந்தையை எடுத்து பார்த்தபோது உயிரற்ற நிலையில், இருந்த பிறந்த சிசுவை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் சங்கர கோமதி, அவரது தாய், தந்தை ஆகிய மூவரையும் விசாரித்து வருகின்றனர். பெற்ற தாயே குழந்தையை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women killed her new born baby for social image


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->