10 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக சேர்ந்த தம்பதி.! மனைவி செய்த செயலால், கணவனுக்கு ஏற்பட்ட சோகம்.!
Women killed her husband in Salem
சுமார் பத்து வருடங்களாக பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்த தம்பதிகள் திடீரென ஒன்றுசேர்ந்து இல்லற வாழ்க்கையை தொடங்கிய நிலையில், தகராறு ஏற்பட்டு மனைவியே கணவரை கொலை செய்து கழிவறையில் புதைத்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருக்கும் செஞ்சி கோட்டையை சேர்ந்த சேட்ட்ய் என்பவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், பவித்ரா என்ற மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர்.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பத்து வருடங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்து சென்று தனித்தனியே வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பாக கணவருடன் சேர்ந்து வாழ்வதாக கூறி பூங்கொடி வந்துள்ளார். மனைவியின் திட்டம் தெரியாமல் கணவரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.
இதனிடையே உறவினர் வீட்டில் நடக்கும் திருமணத்திற்காக சேட்டு மற்றும் பூங்கொடி குழந்தைகளுடன் வெளியூர் சென்றுள்ளனர். அப்பொழுது கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், பிள்ளைகளை அவர்களின் சொந்த ஊரில் விட்டுவிட்டு செஞ்சி கோட்டைக்கு திரும்பி இருக்கின்றனர். வீட்டிற்கு வந்ததும் மீண்டும் கோபம் அதிகமாக ஆத்திரமடைந்த பூங்கொடி கணவரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி இருக்கின்றார்.
இதில் பலத்த காயமடைந்த சேட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கின்றார். அதன் பின்னர் வீட்டின் பின்புறம் இருக்கும் கழிவறையில் குழி ஒன்றைத் தோண்டி அதில் கணவரை புதைத்துள்ளார். பின்னர் அந்த இடத்தில் விறகு கட்டையை அடுக்கி வைத்ததோடு துர்நாற்றம் வீசாமல் இருக்க பிளீச்சிங் பவுடரும், மாட்டு சாணத்தையும் அடிக்கடி தெளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் உறவினர் வீட்டில் இருந்து வந்த மகள் பவித்ரா அப்பா எங்கே என்று கேள்வி எழுப்ப, அவர் வெளியூருக்கு கட்டட வேலையாக சென்றிருப்பதாக பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுபோலவே அனைவரிடமும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அங்கிருந்து பூங்கொடி தப்பியோடி இருக்கின்றார். இதனிடையே பவித்ரா வீட்டிற்கு அருகே துர்நாற்றம் வீசியதால் அந்த இடத்தை தோண்டி இருக்கின்றார். அங்கே ரத்தக்கரை இருந்ததால் தன்னுடைய சித்தப்பாவை அழைத்து இது குறித்து தெரிவித்துள்ளார்.
பின்னர் இது தொடர்பாக போலிசுக்கு தெரிவிக்க அவர்கள் விரைந்து வந்து சேட்டுவின் உடலை கண்டெடுத்தனர். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் பூங்கொடியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
English Summary
Women killed her husband in Salem