வேலைக்காரனுடன் உறவு.. வீட்டுக்காரனை பரலோகம் அனுப்பிய மனைவி.!
Women killed her husband for love
வேளாங்கண்ணி அருகே சடையன் காடு பகுதியில் வசித்து வரும் தேவேந்திரனுக்கு சூர்யா என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது. எனவே மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.
கடந்த 6ஆம் தேதி சிகிச்சை பலனின்றி தேவேந்திரன் திருச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர், உறவினர்கள் அவரது உடலை தகனம் செய்த நிலையில், மனைவி சூர்யா எந்த வித கவலையும் இல்லாமல் ஜாலியாக இருப்பதை கண்டு உறவினர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
அவரது செல்போனை ஆய்வு செய்த பொழுது அவருக்கு வேலைக்காரன் சந்திரசேகரன் என்பவருடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறை விசாரணையில் தேவேந்திரன் சாப்பிட்ட உணவில் விஷ மருந்து கலந்து வைத்து கொலை செய்ததை மனைவி சூர்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
வேலைககாரனாக இருந்த சந்திரசேகருடன் மனைவிக்கு இருக்கும் தொடர்பை கண்டறிந்த கணவர் தேவேந்திரன் கண்டித்துள்ளார். எனவே, தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி இருவரும் திட்டம் தீட்டி கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது
English Summary
Women killed her husband for love