நாமக்கல்: கார் மோதி பெண் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் வையப்பமலை மலைக்காவல் அம்மன் தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி செல்லம்மாள் (55). இவர்களுடைய மகளை மணியனூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். 

இந்நிலையில் மகளைப் பார்ப்பதற்காக செல்லம்மாள் மணியனூர் சென்றுள்ளார். அப்பொழுது பரமத்தி-திருச்செங்கோடு சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக செல்லமாள் மீது மோதியது. 

இதில் செல்லம்மாள் பலத்த காயமடைந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே செல்லமாள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து செல்லம்மாளின் மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women killed Car collision in namakkal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->