திருமணத்திற்கு பின்னும், பாய் பிரண்ட் கூட சேட்டிங்.! திட்டம் போட்ட கணவன் விபரீதம்.!  - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெயசக்திபாலா (18) என்பவருக்கும், விருதுநகர் மாவட்டம், முத்துப்பாண்டிக்கும் (20) என்பவருக்கும், பத்து மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து ஜெயசக்திபாலா, பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த 12ம் தேதி ஜெய்சக்தி பாலா கத்திக்குத்து காயங்களுடன் கண்மாயில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தீவிரமாக காவல்துறையினர் விசாரித்ததில் கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதனை தொடர்ந்து முத்துபாண்டியிடம் மேற்கொண்ட விசாரணையில், தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட பெற்றோர் வீட்டிற்கு வந்த ஜெயசக்திபாலா கணவன் பலமுறை தங்களது வீட்டிற்கு அழைத்தும் போகவில்லை என்று கூறப்படுகிறது. உறவினர்கள், சமாதானமாக பேசி இருவரையும் சேர்ந்து வைக்க திட்டமிட்டனர். 

ஆனால், முத்துப்பாண்டி தனது மனைவி மீது சந்தேகம் அடைந்து நண்பர்களுடன் சேர்ந்து தனது மனைவியைக் கொலை செய்து இருக்கின்றார். பேஸ்புக்கில் ஆண் நண்பர்களுடன் அரட்டை அடித்ததால் தான் குடும்பம் நடத்த வரவில்லை என கணவன் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women killed by arrogant husband


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->