காதலனுடன் ஓடிய பெண்ணிற்கு நேர்ந்த துயர சம்பவம்.! பெற்றோர் தவிப்பு.!!  - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்திலுள்ள கருங்கல் பட்டியை சேர்ந்த சேகர் என்பவரது மகன் மணிவாசன் என்பவர் ரம்யா என்பவரை காதலித்துள்ளார். இந்நிலையில் ரம்யாவிற்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் அருகில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

Image result for marriage seithipunal

பின்னர், பாதுகாப்பு கேட்டு தோகைமலை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இருதரப்பு பெற்றோர்களை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ரம்யாவை மணிவாசன் குடும்பத்துடன் அனுப்பி வைத்துள்ளார். அப்பொழுது அவர்களை ஒரு கார் தொடர்ந்து வந்து மறித்து வழியிலேயே ரம்யாவை கடத்தி சென்றுள்ளனர்.

மேலும் உடனிருந்த மணிவாசன் மற்றும் அவரது பெற்றோரை கட்டை, கம்பு போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்திச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர். போலீஸ் நிலையம் அருகிலேயே காத்திருந்து அந்த பெண்ணை கடத்தி உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women kidnapping in karur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->