மதுரை: களவாணி படம் போல., கல்யாண பெண்ணை கொத்தாக தூக்கிய மர்ம கும்பல்.!  - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர் சேரி என்ற பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு 21 வயதில் சங்கீதா என்ற பெண் இருக்கின்றார். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் லேப் டெக்னீசியன் ஆக பணிபுரிந்து வருகின்றார், வருகின்ற முப்பதாம் தேதி இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. 

நேற்று இரவு தனது பணியை முடித்துவிட்டு சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் அந்த பெண் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில், மர்ம நபர்கள் காரில் வந்து இரு சக்கர வாகனத்தை வழிமறித்து விட்டு சங்கீதாவின் சகோதரனை தாக்கி சங்கீதாவை காரில் கடத்திச் சென்றது. 

உடனடியாக காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மர்ம நபரை மடக்கிப் பிடிக்க மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி இருக்கின்றது. அந்த பெண்ணை மீட்க கோரி உறவினர்கள் அலங்காநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women kidnapped by unknown group in madurai 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->