மூன்று இளைஞர்களின் அதி வேகத்தால் நிலை குலைந்த குடும்பம்!
women died bike accident in kattumannarkudi
காட்டுமன்னார் கோயில் தெக்கிருப்பை பகுதியில் வசித்து வருபவர் திருநீலகண்டன், இவர் தனது மனைவி மாலதியுடன் இருசக்கர வாகனத்தில் சிதம்பரதிலிருந்து வந்துகொண்டிருந்தார். அப்போது பூலாமேடு அருகே எதிரில் ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் அதிவேகமாக திருநீலகண்டனின் இரு சக்கர வாகனத்தில் மோதினர். இதில் திருநீலகண்டனின் மனைவி மாலதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருநீலகண்டன் ஆபத்தான நிலையில் சிதம்பரம் மருத்துவமனையில் சேர்க்கப்பபட்டார், பின்பு அங்கிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்தில் இறந்து போன மாலதிக்கு 3 பெண் பிள்ளைகள்.
ஒரே வாகனத்தில் மூன்று இளைஞர்கள் அதிவேகமாக மோதியதில் ஒரு குடும்பமே நிலை குலைந்து போய்விட்டது.
English Summary
women died bike accident in kattumannarkudi