ஊசிபோட்டதால் பறிபோன உயிர்... நிர்க்கதியாக தவிக்கும் 4 குழந்தைகள்..!
women death put injection in medical shop
பெரம்பலூரில் மருந்துக்கடைக்காரர் ஒருவர் ஊசி போட்ட காரணத்தால், பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில், மங்களமேடு அடுத்த கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரவன். இவர் மருத்துவ படிப்பான டி.பார்ம் படித்துள்ளார். எனவே, அதே ஊரில் மெடிக்கல் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இதனால், அவர் சிறுசிறு நோய்களுக்கு ஊசி போடுவது, மாத்திரை கொடுப்பது என்று மருத்துவராகவும் இருந்திருக்கிறார். இந்த நிலையில் தமிழ்செல்வி என்ற 35 வயது பெண் தனது கணவரை இழந்து தனது 4 பிள்ளைகளுடன் அதே பகுதியில் வாழ்ந்து வந்தார்.
தமிழ்செல்வி, சளி தொல்லை காரணமாக கதிரவன் மெடிக்கலுக்கு சென்றிருக்கிறார். அங்கு, அவர் தமிழ்செல்வியின் கைநரம்பில் ஊசி போட்டுள்ளார். இதன் காரணமாக, சில நிமிடத்தில் தமிழ்செல்வி மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தமிழ்செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.
இதை தொடர்ந்து, கதிரவனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தார்கள். தற்போது தாயையும் தந்தையையும் இழந்த அவரது நான்கு பிள்ளைகளும் ஆதரவற்று நிற்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
women death put injection in medical shop