மாவு என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தில் போண்டா செய்த மருமகள்!! சற்று நேரத்தில் நேர்ந்த விபரீதம்!!  - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட அரக்கோணம் அருகேபூச்சிக்கொல்லி மருந்தை கடலை மாவு என தவறாக நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

அரக்கோணத்தை அடுத்துள்ள எஸ்.ஆர் கண்டிகை பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. இவரது மருமகள் வீட்டில் போண்டா செய்து சாப்பிடுவதற்காக கடலை மாவு வாங்கி வர கூறியுள்ளார். இதற்காக அவர் மைதா மாவுடன், அவரது மிளகாய் தோட்டத்திற்கு தேவையான பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி வந்துள்ளார். 

இதனை தொடர்ந்து, அவரது மருமகள் கடலை மாவுடன், வாங்கி வந்த பூச்சிக்கொல்லி மருந்தையும் ஒன்றாக சேர்த்து போண்டா செய்துள்ளார். இதனை அவரது மாமியார் மாமனார் உட்பட குடும்பமே சேர்ந்து சாப்பிட்டுள்ளனர். 

சற்று நேரத்திலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு குடும்பமே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் பெரியசாமியின் மருமகள் பாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women death in ranipet district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->