இளம்பெண்ணிடம் மோகம்., எடுத்த ஓட்டம்.! மாறி மாறி போலீஸ் ஸ்டேஷனில் களேபரம்.!
women and men illegal love in ramnadu
ராமநாதபுரம் மாவட்டதட்டில் சாயல்குடி பகுதியை சேர்ந்த முனியப்பா மகன் கோட்டைசாமிக்கு திருமணமாகி, மனைவி முனியம்மாள் மற்றும் 8 வயது மகன் கலையரசன் ஆகியோருடன் அவர் வசித்து வருகின்றார்.
இந்த நிலையில், கோட்டைசாமிக்கு 20 வயதான மூகாம்பிகை என்ற இளம்பெண்ணிடம் காதல் உருவாகியுள்ளது. இதனை அடுத்து இளம்பெண் மீது கொண்ட மோகத்தால் கோட்டைசாமி அந்த பெண்ணை தனது ஆசைக்கு இணங்க வைத்து, பேசி மயக்கி அந்த இளம்பெண்ணை அழைத்து கொண்டு கடந்த 14 ஆம் தேதி கோட்டைசாமி ஊரை விட்டு ஓடி இருக்கின்றார்.
இதன் காரணமாக மகளை காணவில்லை என்று இளம்பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையின் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இளம்பெண்ணின் உறவினர்கள் கோட்டைசாமி வீட்டிற்கு சென்று அங்குள்ள அனைத்தயும் அடித்து நொறுக்கினர். எனவே, கோட்டைசாமியின் தந்தை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
English Summary
women and men illegal love in ramnadu