பெண்ணை மானபங்க படுத்திய பிடல் காஸ்ட்ரோ, கார்ல் மாக்ஸ்.! சிதம்பரம் அருகே பரபரப்பு.!
WOMEN ABUSING BY 3 IN CHIDAMBARAM
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் குமரன் மேடு அண்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த மாயவேல் என்பவருக்கு ராதா என்ற மனைவி இருக்கின்றார்.
இவர் அப்பகுதியில் மீன் விற்பனை செய்து கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவரது மகன்கள் பிடல் காஸ்ட்ரோ, கண்டிலோ, காரல்மார்க்ஸ் உள்ளிட்ட 3 பேரும் ராதாவிடம் மீன் வாங்கி இருக்கின்றனர்.
அப்போது ராதாவுக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த அண்ணன் தம்பி மூன்று பேரும் அந்த பெண்மணியை ஆபாசமாக திட்டி அடித்து துன்புறுத்திய படுத்தியதாக தெரிகிறது.
இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது அந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
WOMEN ABUSING BY 3 IN CHIDAMBARAM