திருச்சி : மகள்களுக்கு பாலியல் துன்புறுத்தல்.! 2வது கணவனை கொன்று ஆற்றில் வீசிய பெண்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் மகள்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இரண்டாவது கணவரை கொன்று ஆற்றில் வீசிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் ரேகா. இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரேகாவின் கணவர் இறந்து விட்டார். இதனால் ரேகா திருச்சி மாவட்டம் முசிறி அருகே தனது மூன்று மகளுடன் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

அப்பொழுது பிரபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, ரேகா பிரபுவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பிரபு ரேகாவின் மகள்களிடம் பாலியல் அத்துமீரில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த ரேகா ஆத்திரமடைந்து பிரபுவை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்பு அவரது உடலை அய்யம்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வீசியுள்ளார்.

இதையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மகனை காணவில்லை என்று பிரபுவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் பிரபுவை கொலை செய்த ரேகாவை 4 மாதங்களுக்குப் பிறகு கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman who murder her 2nd husband and threw her into the river in Trichy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->