பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் திடீர் தற்கொலை!! மரணத்தில் ஒளிந்திருக்கும் மர்மம்!!
Woman suicide victim Mystery hidden in death !!
ஈரோடு மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் இவரது மகள் பர்வின் பாவி வயது (23) இவர் திருப்பூர் மாவட்ட போலீசில் பணியாற்றி வருகிறார்.
இவர் 2017-ம் ஆண்டு தமிழக போலீசில் பணியில் சேர்ந்துள்ளார். 2018-ம் ஆண்டு முதல் திருப்பூர் மாவட்ட போலீசில் பணியாற்றி வருகிறார்
பெண் காவலர் பர்வின் பாவி நல்லூர் பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று பல்லடம் தாலுகா அலுவலகத்தில் மிண்ணனு வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். மதியம் 2:30 மணி அளவில் பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் இரவு 7:30 மணி அளவில் திடீரென மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து உள்ளார். உடனே மயங்கி விழுந்த அவரை அவரது தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெண் காவலர் பர்வீன் பாவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பூர் மாவட்டபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
தமிழகத்தில் காவல்துறையினர் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்துவரும் நிலையில், பெண் காவலர் பர்வீன் பாவியின் தற்கொலை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
English Summary
Woman suicide victim Mystery hidden in death !!