ஆபாச வீடியோ எடுத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. பள்ளி சிறுவர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது..! - Seithipunal
Seithipunal


இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மேல தெருவை சேர்ந்தஹரிஹரன்  22 வயது பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார் .அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். நெருக்கமாக இருந்த பொழுது அதனை பெண்ணுக்கு தெரியாமல் வீடியோவாக எடுத்துள்ளார்.

அந்த வீடியோக்களை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார் இதனைத் தொடர்ந்து அவரது நண்பர்களான ஜுனத் அகமது, ப்ரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் நால்வர் அந்த வீடியோவை இளம்பெண்ணிடம் காட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தனக்கு தெரிந்த மாடசாமி என்பவர் தான் அது பற்றி கூறியுள்ளார். ஆனால் அந்த இளம்பெண்ணுக்கு உதவாமல் இந்த வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது இளம்பெண் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Raped In Viruthunagar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->