இராமநாதபுரம்: இளம்பெண் கொலை., சகோதரர்கள், தந்தை கைது.. பெண்ணின் கள்ளக்காதலால் சோகம்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்காதல் விவகாரத்தால் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அழகேஸ்வரி. இவருக்கு  திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கணவனுடன் ஏற்பட்ட தகாராறால், அழகேஸ்வரி அவரை பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், அழகேஸ்வரியின்  நடத்தை சரியில்லாததால் அவர் தந்தை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர் கேட்காமல் தனது செயலை தொடர்ந்துள்ளார். இதனிடையே தனது மகளை கொலை செய்து விட்டதாக அழகேஸ்வரியின் தந்தை ஆதி காவல்நிலையத்தில் சரண்டைந்தார். 

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அழகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறாய்வில் அழகேஸ்வரி பலரால் அடித்து கொல்லப்பட்டதற்கான தடையங்கள் கிடைத்துள்ளன. 

இதனால் ஆதியிடம் காவல் துறையினர் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மகளின் நடத்தையை பற்றி மகன்களிடம் கூறியதாகவும், அவருக்கு அறிவுரை சொல்ல சென்ற போது வாக்குவாதத்தில் அவரை அடித்து கொலை செய்துவிட்டதாகவும்  தெரிவித்தார்.

மேலும், மகன்கள் கைதாகிவிடகூடாது என்பதற்காக தான் முன்னரே வந்து சரணடைந்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஆதியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவ்ரது மகன்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோக்த்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Murder Near Ramanathapuram Due to illegal lover affair


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->