சாலையில் தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு கத்தி குத்து.. விசாரணையில் வெளிவந்த உண்மை..! - Seithipunal
Seithipunal


தூங்கி கொண்டிருந்த பெண்ணை கத்தியால் குத்தியதில் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் உள்ள காலணி விற்கும் கடையில் சில பெண்கள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பெண்களை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் கௌசர் மற்றும் தனம் என்ற இரு பெண்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

உடனடியாக உடன் இருந்தவர்கள் அவர்களை மீட்டு வருகின்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கௌசர் பரிதாபமாக உயிரிழந்தார். தனத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கத்தியால் குத்திய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் திருவண்ணாமலையை சேர்ந்த தேவேந்திரன்  என்பதும் மூன்று மாதங்களுக்கு முன்பு தனத்துடன் திருமணம் நடைபெற்றதும் தெரியவந்தது.

இந்நிலையில் அவரை விட்டு பிரிந்து ஆம்பூர் வந்ததாக தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திரன் வெளிவந்து உறங்கிக் கொண்டிருந்த அவரை கத்தியால் குத்தியுள்ளார். அப்போது தடுக்க வந்த கௌசர் என்ற பெண்ணுக்கும் தவறுதலாக கத்திக்குத்து விழுந்துள்ளது என அவர் வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார்.

கௌசரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Killed Near Thiruppathur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->