குடும்ப தகராறு.. குழந்தைகளை கொன்று விட்டு பெண் எடுத்த விபரீத முடிவு..!
Woman Killed hid children and Committed Suicide
இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் தொட்டபாவலி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும் பிரசாத் (4) மகனும் , லதா என்ற ஆறு மாத குழந்தையும் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவதன்று இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர் 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அங்குள்ள கிணற்றில் குழந்தைகளை வீசி சென்றுவிட்டு லட்சுமி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Woman Killed hid children and Committed Suicide