காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்பு..!
Woman Death Near Nilgiris
காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூக்கல்தொரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. அதனால், அந்த பகுதியில் காட்டாற்று வெள்ளம் சூழந்தது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஹாலம்மாள் என்பவர் தேயிலை தோட்ட பணிக்குச் சென்று வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
எங்கும் தண்ணீர் நிரம்பி இருந்ததால் அவர் சாலை என நினைத்து சிறு ஓடையை கடந்துள்ளார். எதிர்பாராத விதமாக காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இரவு நீண்ட நேரமாகியும் அவரை காணாததால் குடும்பத்தினர் அவரை தேடியுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை மசகல் பகுதியில் ஆற்று ஓரம் முட்புதரில் சடலமாக மீட்கபட்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Woman Death Near Nilgiris