திருநெல்வேலி: அண்னன் இறந்த துக்கம் தாளாமல் தங்கை எடுத்த வீபரித முடிவு..!
Woman Committed suicide Near Thirunelveli
அண்ணன் இறந்த துக்கத்தில் தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மேகலிங்கபுரத்தை சேர்ந்தவர் பிச்சுமணி. இவருக்கு சுப்புலெட்சுமி (50) என்ற மனைவி இருகிறார். சுப்புலெட்சுமியின் சகோதரர் உடல்நல குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால், சுப்புலெட்சுமி மன உளைச்சலில் காணப்பட்டார். மன உளைச்சலில் இருந்த அவரை தேற்ற உறவினர்கள் பல முயற்சி செய்தனர். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.
104
044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)
022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.
English Summary
Woman Committed suicide Near Thirunelveli