தினமும் சண்டை.. குடும்ப தகராற்றால் பெண் எடுத்த விபரீத முடிவு.. ராணிபேட்டை அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராற்றால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிபேட்டை மாவட்டம், நரசிங்கபுரத்தை   சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு திருமணமாகி லட்சுமி  என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், வீட்டொல் யாரும் இல்லாத நேரத்தில் கொசுமருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளார். வீட்டிற்கு வந்த வெங்கடேசன் மனைவி நுரையுடன் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Committed Suicide Near Ranipet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->