இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு.. திண்டுக்கல் அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கவுண்டம்பட்டி சேர்ந்தவர் சரவணன் இவருக்கு திருமணமாகி குரு லட்சுமி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். சரவணன் மருதாணி பாலம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார் கடந்த சில நாட்களாக அவரது மனைவிக்கு மன நிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

அடிக்கடி குரு லட்சுமி தனது குடும்பத்தாருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
வீட்டில் தூங்கி கொண்டிருந்த காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குரு லட்சுமியின் தாயார் முருகேஸ்வரி சரவணனுக்கு இது குறித்து உடனடியாக தகவல் அளித்தார். அக்கம்பக்கத்தில் தேடியபோது அருகில் உள்ள கிணற்றில் குழந்தைகளைக் கொன்றுவிட்டு குரு லட்சுமிக்கும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Committed suicide Near Dindugal


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->