கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட மகள்... தாய் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


மகள் இறந்த துக்கத்தில் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் , சூ.பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகர். இவருக்கு ஆதிலட்சுமி (34) என்ற மனைவியும் மகளும் உள்ளனர். இவர் கடந்த ஆண்டு கிணற்றில் விழுந்து இறந்தார். அப்போதிலிருந்து அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவதன்று அவர்கள் நிலத்திற்கு சென்ற அவர் திரும்பவரவில்லை. அங்கு சென்ற அவரது குடும்பத்தினர் கிணற்றின் அருகே அவரது காலணி கிடந்ததால் தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.

இந்த தகவலை அடுத்து, விரைந்து வந்த கிணற்றில் இறங்கி அவரது உடலை மீட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மகள் இறந்த கிணற்றிலேயே தாயும் விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Committed suicide In Kallakurichi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->