கடன் தொல்லையால் பெண் தற்கொலை.. திருநெல்வேலியில் நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


சுய உதவி குழுவில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் . இவரின் மனைவி தேவி (35) அங்குள்ள சுய உதவி குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.

அந்த சுய உதவி குழுவின் மூலம் தேவி 1 லட்சத்தி 50 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். ஆனால், அந்த கடனை கட்ட முடியாமல் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று, மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த தங்கராசு தீயை அணைக்க முயற்சி செய்த போது அவர் மீதும் தீ பற்றியது. இதனை கண்ட அக்கம்பக்கதினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் தேவி  பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Committed suicide due to Loan Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->