ஐந்து மாதத்தில் கசந்த காதல்... மன உளைச்சலில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி , பெரியகடை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் அதே பகுதியை சேர்ந்த சினேகா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டதில் இருவருக்கும் இடையில் சண்டை முற்றவே சினேகா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த சினேகா கணவனுக்கு போன் செய்து தான் தற்கொலை செய்து கொள்ளபோவதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் சினேகாவின் தந்தைக்கும் உறவினருக்கும் தகவலளித்துள்ளார்.

அவர்கள் அங்கு சென்று பார்த்த போது சினேகா பிணமாக தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.

104  ,  044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)

022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Committed suicide due to family issue Near trichy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->