குடும்ப தகராறு.. மன உளைச்சலில் இளம்பெண் தற்கொலை.. திருப்பூர் அருகே சோகம்..! - Seithipunal
Seithipunal


குடும்ப தகராற்றால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், இலவந்தி கிராமத்தில் வசித்து வருபவர் சிவா . இவருக்கு திருமணமாகி தனலட்சுமி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். சிவா அந்த பகுதியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். அவர் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்வதால் இருவருக்கும் இடையில் தகராறு  ஏற்பட்டுள்ளது.

சம்பவதன்று, வழக்கம் போல இருவருக்கும் தகராறு ஏற்படுள்ளது. இதனை அடுத்து சிவா வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட தனலட்சுமி மட்டும் தனியே வசித்து வந்தார். இதனை அடுத்து குழந்தைகள் தூங்கிய பின் தனலெட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தூங்கி எழுந்த குழந்தைகள் அழும் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் தனலெட்சுமி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கதினர் காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.

104 

044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)

022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Committed suicide due to family issue Near Thiruppur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->