குடும்ப தகராறு.. மன உளைச்சலில் இளம்பெண் தற்கொலை..! - Seithipunal
Seithipunal


குடும்ப தகராறு காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தைச் சேர்ந்தவர்  காட்டுராஜா (45) . இவருக்கு மலர்கொடி என்ற மனைவி இருக்கிறார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டடுள்ளது. இதனால், மன உளைச்சலில் இருந்த அவர் அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மனைவியை காணாததால் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். ஊர்காரர்கள் அங்குள்ள கிணற்றில் ஒரு பெண் பிணம் கிடைப்பதாக கூறினர். இதனை அடுத்து அவர் அங்கு சென்ற போது மலர்கொடி இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து, விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Committed suicide due to family issue Near Theni


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->