சித்திரவதை செய்த மாமனார்.. உடந்தையாக இருந்த கணவன்.. மூன்று மாத கர்ப்பிணிக்கு நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


கணவனும் மானாரும் குடித்து விட்டு அடித்து துன்புறுத்தியதால் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்புமணி (30). இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில், மீண்டும் சகுந்தலா கர்பமாக உள்ளார்.  அன்புமணியின் தந்தை செல்வராசு (55) அடிக்கடி மருமகளும் சண்டையிட்டு வந்துள்ளார்.

இதனை சகுந்தலா அவரது கணவனிடன் சொல்லியுள்ளார். ஆனால், அவர் அதனை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். மேலும், தந்தையும் மகனும் குடித்துவிட்டு வந்து சகுந்தலாவை அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் , சகுந்தலா கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், சம்பவதன்று செல்வராசு மருமகளிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து தனி அறைக்கு சென்ற சகுந்தலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த அவர்கள் சகுந்தலா தற்கொலைச் செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Committed suicide due to family issue Near Ariyalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->