குடும்ப தகராறு.. திருமணமான எட்டே மாதத்தில் இளம்பெண் விபரீத முடிவு,..!
Woman Committed suicide due to family issue In Krishnagiri
குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பகுதியை சேர்ந்தவர் ஜெகன். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் அருள்மொழி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவதன்று அவர்களுக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டது. ஜெகன் வேலைக்கு சென்று விட வீட்டில் தனியாக இருந்த அருள்மொழி தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.
104
044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)
022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.KA
English Summary
Woman Committed suicide due to family issue In Krishnagiri