தர்மபுரி: தினமும் சண்டை மனமுடைந்து இளம்பெண் தற்கொலை..! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டம், காவிரிபட்டிணம் அருகே உள்ள பெரியபுளியம்பட்டியை சேர்ந்தவர் அன்பு. இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவி உள்ளார். அன்பு அந்த பகுதியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இதற்கிடையில் அன்புவிற்கும் சத்யாவிற்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்ப்படுள்ளது. தினமும் கணவன் மனைவிக்கிடையே சண்டை நடந்து வந்ததால் சத்யா மிகவும் மனமுடந்து காணப்படுள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று இருவருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானார் சத்யா.

வழக்கம் போல் அன்பு வேலைக்கு சென்றுள்ளார் வீட்டில் யாரும் இல்லாத இந்த நேரத்தில் சத்யா வாழ்வதை விட தற்கொலை செய்து கொள்வதே மேல் என முடிவெடுத்து விஷம் அருந்தியுள்ளார்.

அங்கு வந்த அவரது உறவினர்கள் சத்யாவின் நிலைமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சத்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Committed suicide due to family issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->