தினம் வீட்டில் தகராறு..!! மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்..!!
Woman Committed suicide due to family issue
குடும்ப தகராற்றால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், குருபரஅள்ளி அருகில் உள்ள ஆலங்கரை பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ்குமார்(33). இவருக்கு திருமணமாகி சுகந்தி என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர்.
சந்தோஷ்குமார் அந்த பகுதியில் லாரி ஒட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டையிட்டு கொள்ளுவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவதன்று வழக்கம் போல இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுகந்தி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Woman Committed suicide due to family issue