திருமணத்திற்கு வற்புறுத்திய பெற்றோர்., இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!
Woman Committed suicide
திருவள்ளூர் மாவட்டம், பன்னுர் அந்தோணியார் புரம் பகுதியில் வசித்து வருபவர் ஃபிரான்சிஸ்- லில்லி தம்பதியினர். இவர்களுக்கு 5 மகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூத்த மகளுக்கு திருமண முடிந்துள்ளது.
இதனை அடுத்து அவர்களின் இரண்டாவது மகளான விஷாலிக்கு வரன் பார்த்து வந்தனர். அருகில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் விஷாலி திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது.
ஆனால் அவருக்கு திருமணம் நடந்தால் தான் அடுத்துள்ள மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியும் ஆதலால் நீ திருமணம் செய்து கொள்ளவேண்டும் என அவரி வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட விஷாலி சம்வதன்று நள்ளிரவில் தனது படுக்கை அறையை உள் பக்கமாக தாழிட்டு கொண்டு உடலில் தீ வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமம் விஷாலினி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோக்த்தை ஏற்படுத்தியுள்ளது.