திருவள்ளூர்.! பெண் தூக்குப்போட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் சின்ன ஈக்காடு சம்பத் நகரை சேர்ந்தவர் வக்கீல் யோகராஜ். இவரது மனைவி அகிலா(31) சென்னை தேனாம்பேட்டையில் சுகாதாரத் துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அகிலா வீட்டின் அறைக்குள் சென்று மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைப்பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்த நிலையில் புல்லரம்பாக்கம் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்தனர்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அகிலா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman commits suicide by hanging in tiruvallur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->