திருமணத்துக்கு மறுத்த கள்ளகாதலன்... காதலில் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


கள்ளகாதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் தெய்வானை. இவருக்கு திருமணமாகி ஒரு மகனும்  ஒரு மகளும் உள்ளனர்.  இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

தெய்வானைக்கு அந்த நிறுவனத்தில் வேலை செய்து வரும் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில், தெய்வானை அந்த வாலிபரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால், அதற்கு அந்த வாலிபர் மறுக்கவே அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  இந்நிலையில் , தெய்வானை அவரது வீட்டின் முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணைன் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman commits suicide by fire


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->