பேஸ்புக்கால் மொத்தமும் போனது.! திருமணமான பெண்ணிற்கு நேர்ந்த விபரீதத்தால், துடிதுடித்துப்போன கணவன்!! - Seithipunal
Seithipunal


சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் அயூப். இவரது மனைவி பொழுதுபோக்கிற்காக விளையாட்டுத்தனமாக பேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து எப்பொழுதும் பேஸ்புக்கிலேயே நேரத்தை செலவிட்டதால் நாளடைவில் அதற்கு அடிமையாகியுள்ளார் மேலும் அதனால் முன்பின் தெரியாத வாசிம் அக்ரம், முகமது மற்றும் பர்ஜீஸ் போன்ற  ஆண்களுடனும் பழக்கம்  ஏற்பட்டுள்ளது. 

அவர்கள் நாளடைவில் நெருக்கமாக பழகிய நிலையில் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் திடீரென அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு பேஸ்புக்தான்  காரணம் என கணவர் அயூப்பிற்கு தெரியவந்தநிலையில் இது குறித்து அவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

 அதில் அவர் பேஸ்புக் மூலம் எனது மனைவியிடம் நட்பாக பழகிய மூன்று பேர் அவரிடம் தவறான முறையில் நடந்துகொண்டனர். மீண்டும் அதனை புகைப்படம் எடுத்து எனது மனைவியை தொடர்ந்து மிரட்டி வந்து பணம் பறித்துள்ளனர். 

இதனால் மனம் உடைந்த எனது மனைவி தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman commits suicide by facebook


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->